செய்யாறு அருகே வாகனம் மோதி டேங்க் ஆபரேட்டர் பலி

செய்யாறு, தூசி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி டேங்க் ஆபரேட்டர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2022-03-29 01:30 GMT

பரிதாபமாக உயிரிழந்த முருகன்

செய்யாறு அருகே வெண்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் முருகன், டேங்க் ஆபரேட்டர். இவர் நேற்று நீரேற்று அறைக்கு சைக்கிளில் சென்றார். வெம்பாக்கம் கூட்டு ரோட்டில் சென்ற போது,  அடையாளம் தெரியாத வாகனம் சைக்கிள் மீது மோதியது.   இதில் முருகன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்த தகவல் அறிந்த உறவினர்கள் விபத்து ஏற்படுத்திய வாகனத்தை பறிமுதல் செய்து ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி,  நேற்று மாலை சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த தூசி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலு, எஸ் ஐ  முத்துக்குமாரசாமி மற்றும் போலீசார் அங்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து விபத்தை ஏற்படுத்திய வரை உடனே கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.  பின்னர் சடலத்தை போலீஸார் மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தூசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Tags:    

Similar News