17 வயது சிறுமியை திருமணம் செய்த டிரைவர் மீது வழக்குப்பதிவு

செய்யாறு அருகே 17 வயது சிறுமியை திருமணம் செய்த டிரைவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update: 2024-05-29 14:40 GMT

17 வயது சிறுமியை திருமணம் செய்த ஆட்டோ டிரைவர் (பைல் படம்)

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த ஆலந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் பிரபாகரன், இவர் சரக்கு வாகன ஓட்டுனராக உள்ளார்,

இவருக்கு இவரது உறவினரான 17 வயது சிறுமிக்கும் கடந்த ஏப்ரல் மாதம் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்று உள்ளது. இந்தத் திருமணம் தொடர்பாக கடந்த 16 ஆம் தேதி 1098 என்ற எண் மூலம் குழந்தைகள் நல காப்பகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அந்த தகவலின் பெயரில் வெம்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலக விரிவாக்க அலுவலர் ஷீலா தேவி மற்றும் அதிகாரிகள் ஆலந்தாங்கல் கிராமத்திற்கு நேரில் சென்று பிரபாகரனிடம் விசாரணை நடத்தினர். அதில் குழந்தை திருமணம் நடைபெற்றது உறுதி செய்யப்பட்டது.

மேலும் குழந்தை திருமணம் சட்டப்படி குற்றம் என பிரபாகரனை அதிகாரிகள் எச்சரித்தனர்.

இதனை அடுத்து சிறுமையை மீட்டு திருவண்ணாமலைக்குள்ள அரசு பெண்கள் காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர் இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலக விரிவாக்க அலுவலர் ஷீலா தேவி செய்யார் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் அந்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் லதா வழக்கு பதிவு செய்து பிரபாகரனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தையல் வகுப்புக்கு சென்ற இளம் பெண் மாயம்

திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் அருகே ஒரு பகுதியை சேர்ந்தவர் 24 வயது இளம்பெண். இவர் பட்டப்படிப்பு முடித்துள்ளார். மேலும் நாள்தோறும் செய்யாறு பகுதியில் தையல் வகுப்பு சென்று விட்டு மதியம் 2 மணிக்கு வீடு திரும்புவது வழக்கமாம்.

இந்நிலையில் நேற்று தையல் வகுப்புக்கு சென்ற இளம்பெண் மீண்டும் வீடு திரும்பவில்லையாம். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் உடனடியாக உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தனது மகளை தேடி உள்ளனர்.

மேலும் பல இடங்களில் விசாரித்ததில் எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இதனை அடுத்து இளம் பெண்ணின் தந்தை பெரணமல்லூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார் அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து இளம் பெண்ணை தேடி வருகின்றனர்.

Similar News