செங்கம் அருகே முன்கள பணியாளர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம்

செங்கம் அருகே கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முன்கள பணியாளர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம்

Update: 2021-07-03 08:45 GMT

செங்கம் அருகே முன்கள பணியாளர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம்

செங்கம் ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கை முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இன்று செங்கம் ஒன்றியம் கண்ணகுருக்கை ஊராட்சியில் நடைபெற்று வரும் முன்கள பணியாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டத்தை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இயக்குனர் லட்சுமி நரசிம்மன், கலந்துகொண்டு நோய்த் தொற்று நோய் முற்றிலுமாக இல்லாமல் செய்திடும் வகையில் களப்பணியாளர்கள் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து விரிவாக பேசினார்.

வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் சுரேஷ், ஊராட்சி மன்றத் தலைவர்கள், முன்களப்பணியாளர்கள், கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News