ஆரணி அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை

ஆரணி அருகே பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-05-13 07:51 GMT

பைல் படம்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த சங்கீதவாடி கிராமத்தை சேர்ந்தவர் விநாயகம். அவரது மகள் நந்தினி (வயது 21). இவருக்கும், திருவள்ளூர் பகுதியை சேர்ந்த ரகு என்பவரும் காதலித்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். குழந்தைகள் இல்லை.

இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நந்தினி தாய் வீட்டில் வசித்து வந்தார். சம்பவத்தன்று நந்தினி வீட்டில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனையிலும், பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் ஆரணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.புகழ் வழக்குப்பதிவு செய்தார். தற்கொலை செய்து கொண்ட நந்தினிக்கு திருமணமாகி 2 ஆண்டுகளே ஆவதால் ஆரணி வருவாய் கோட்டாட்சியர் கவிதா மேல் விசாரணை நடத்தி வருகிறார். 

Tags:    

Similar News