அமராவதியில் உபரி நீர் திறப்பு: ஆற்றில் ஆர்ப்பரித்து செல்லும் தண்ணீர்

திருப்பூர் மாவட்டம், அமராவதி ஆற்றில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால், ஆற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது.

Update: 2021-07-24 13:01 GMT

அமராவதி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப் பேட்டை அருகே, மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில், அமராவதி அணை உள்ளது. அமராவதி அணையை ஒட்டிய நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் அமராவதி ஆற்றில், 3300 கன அடி தண்ணீர் வர துவங்கி உள்ளதால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பு கருதி, அணையில் இருந்து 3800 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், ஆற்றில் நீர் ஆர்ப்பரித்துப் பாய்கிறது. ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. அமராவதி ஆற்றின் கரையோரங்களில் உள்ள கிராமங்களில் தண்டோர மூலம் ,கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News