உடுமலை அருகே பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது

உடுமலை அருகே பணம் வைத்து சூதாடிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-09-28 14:35 GMT

பைல் படம்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பணம் வைத்து சூதாடுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்பகுதியில் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த மோகன்குமார், மஜீத் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 1,150 ரூபாய் பணமும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News