பல்லடம் அருகே விபத்தில் கோழிப்பண்ணை தொழிலாளி பலி

பல்லடம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில், கோழிப்பண்ணை தொழிலாளி பலியானார்.

Update: 2021-09-15 11:52 GMT

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மேற்கு பல்லடம் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி, இவரது மகன் திலகராஜ்,28, கோழிப்பண்ணையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு கரடிவாவியில் உள்ள கோழிப்பண்ணையில் வேலைபார்த்து விட்டு,  பல்லடம் நோக்கில் பைக்கில் வந்து கொண்டிருந்தார்.

எலந்தகுட்டை அருகே பைக் வந்தபோது, எதிரே வந்த லாரி மோதியது. இந்த விபத்தில் திலகராஜ் படுகாயமடைந்தார். அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். விபத்து குறித்து பல்லடம் போலீஸார் விசாரிக்கின்றனர்.

Tags:    

Similar News