தொப்பம்பட்டி ஊராட்சியில் நாளை தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள்

தொப்பம்பட்டி ஊராட்சியில் நாளை தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்களை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Update: 2021-10-02 12:22 GMT

பைல் படம்.

தாராபுரம் வட்டாரம் தொப்பம்பட்டி ஊராட்சியில், மடத்துப்பாளையம் மற்றும் வரப்பாளையம் குக்கிராமங்களில் உள்ள ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளிக்கூட வளாகங்களில் (வாக்குச்சாவடி மையங்கள்) நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 7.00 மணி முதல் கோவிட்ஷீல்டு, வேக்சினேசன் தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெறுகிறது. அதுசமயம் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் விடுபடாமல் முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். தொப்பம்பட்டி ஊராட்சி 100 சதவிகிதம் தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஊராட்சியாக்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்குமாறு தொப்பம்பட்டி ஊராட்சி மன்றத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News