போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

POCSO Act Tamil - காங்கயத்தில், ஒன்றரை வயது குழந்தையை, பாலியல் தொல்லை செய்த வாலிபரை, போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-07-29 07:27 GMT

காங்கயத்தில், ஒன்றரை வயது குழந்தையை, பாலியல் தொல்லை செய்த வாலிபரை, போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

POCSO Act Tamil - காங்கயத்தை சேர்ந்த பெற்றோரின் ஒன்றரை வயது பெண் குழந்தை, வீட்டின் முன் விளையாடி கொண்டிருந்தது. குழந்தையின் அழுகுரல் கேட்டதால், வீட்டுக்குள் இருந்த குழந்தையின் தாய், வெளியே வந்து பார்த்துள்ளார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த அஜீத்குமார் 24என்பவர், குழந்தையிடம் பாலியல் தொல்லை செய்தது தெரிய வந்தது.

இதுகுறித்து, காங்கயம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில், குழந்தையின் தாய் புகார் அளித்தார். போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவுசெய்த மகளிர் போலீசார், அஜீத்குமாரை கைது செய்தனர்.  


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News