வெள்ளகோவிலில் 20 டன் முருங்கைக்காய் கொள்முதல்

வெள்ளகோவில் வாரச்சந்தையில் 20 டன் முருங்கைக்காய் கொள்முதல் செய்யப்பட்டது.

Update: 2022-08-15 06:06 GMT

வெள்ளகோவில் வாரச்சந்தையில் 20 டன் முருங்கைக்காய் கொள்முதல் செய்யப்பட்டது.

வெள்ளகோவிலில் வாரச்சந்தையொட்டி ஞாயிறுதோறும் முருங்கைக்காய் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த கொள்முதல் நிலையத்திற்கு வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் முருங்கைக்காய்களை விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.

நேற்று 90 விவசாயிகள், 20 டன் முருங்கைக்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் முத்தூர், வெள்ளகோவில், காங்கயம், மூலனூர் பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் கலந்துகொண்டு ஒரு கிலோ செடிமுருங்கை ரூ.15 முதல் ரூ.17 வரைக்கும், மரம் முருங்கை ரூ.12 முதல் ரூ.15 வரைக்கும், கரும்பு முருங்கை ரூ.18 முதல் ரூ.25 வரைக்கும் கொள்முதல் செய்தனர்.

Similar News