அழகு நாச்சியம்மன் கோவில் உண்டியல் திறப்பு

Amman Temple -வெள்ளகோவில் அருகே உள்ள அழகு நாச்சியம்மன் கோவில் உண்டியல் திறக்கப்பட்டது.

Update: 2022-09-14 05:12 GMT

வெள்ளகோவில் அருகே உள்ள அழகு நாச்சியம்மன் கோவிலில் உண்டியல், காணிக்கை எண்ணப்பட்டது.

Amman Temple -நிகழ்ச்சிக்கு, இந்து சமய அறநிலையத்துறை திருப்பூர் உதவி ஆணையர் செல்வராஜ் தலைமை வகித்தார். காங்கயம் ஆய்வாளர் அபிநயா, செயல் அலுவலர் ராமநாதன் முன்னிலை வகித்தார். நடப்பாண்டில், கடந்த ஜூன் 8-ம் தேதிக்கு பிறகு, நேற்று அழகு நாச்சியம்மன் கோவில் உண்டியல் திறக்கப்பட்டது.

இதில் மொத்தம் ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 277 ரூபாய், பக்தர்களின் காணிக்கை இருந்தது. உண்டியல் திறப்பு, காணிக்கை எண்ணும் பணியில் கோவில் ஊழியர்கள் ஈடுபட்டனர். 




அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News