காங்கயம் அருகே விபத்து ஏற்படுத்திய தனியார் பஸ் சிறைபிடிப்பு

Tirupur News- காங்கயம் அருகே விபத்தை ஏற்படுத்திய தனியார் பஸ்சை பொதுமக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-11-22 07:56 GMT

Tirupur News- காங்கயம் அருகே தனியார் பஸ்சை சிறைபிடித்த பொதுமக்கள்.

Tirupur News,Tirupur News Today- திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே உள்ள அவினாசிபாளையம் புதூர் பகுதியை சேர்ந்தவர் பொன்னுசாமி (வயது 46). வேன் ஓட்டுநர். இவர் நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) மதியம் தனது இரு சக்கர வாகனத்தில் சாலையை கடந்து செல்ல காங்கயம் பஸ் ஸ்டாண்ட் அருகே நின்று கொண்டிருந்தார்.

அப்போது ஈரோட்டில் இருந்து பழனிக்கு சென்ற தனியார் பஸ் ஒன்று அதிவேகத்தில் சென்று பொன்னுசாமி மீது மோதியதாக தெரிகிறது. இந்த விபத்தில் பொன்னுசாமி பஸ்சுக்கு அடியில் சிக்கி படுகாயமடைந்தார்.

உடனே அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பொன்னுசாமியை மீட்டு, காங்கயம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதனையடுத்து பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் ஆவேசம் அடைந்து அதிவேகமாக சென்று விபத்தை ஏற்படுத்திய தனியார் பஸ்சை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த காங்கயம் போலீசார் அந்த இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் பொதுமக்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து பொதுமக்கள் அவ்விடத்தை விட்டு கலைந்து சென்றனர். இதனால் காங்கயம் பஸ் ஸ்டாண்ட் சாலையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பொதுவாக, காங்கயம் வழியாக திருப்பூருக்கு இயக்கப்படும் கரூர், ஈரோடு தனியார் பஸ்கள் அதிவேகமாக இயக்கப்படுகின்றன. நகர பகுதிக்குள் மற்றும் ஊர்கள் உள்ள பகுதிகளில், ரோட்டில் மக்கள் நடமாட்டம் உள்ள இடங்களில் கூட பஸ்களின் வேகத்தை குறைப்பதில்லை. எனவே, தனியார் பஸ்களுக்கு வேக கட்டுப்பாடு கொண்டு வருவது மிகவும் முக்கியம். இதுபோன்ற விபத்துகள் நடக்க, கட்டுப்பாடற்ற வேகத்தில் பஸ்கள், லாரிகள், வேன்கள் உள்ளிட்ட வாகனங்கள் இயக்கப்படுவதுதான் முக்கிய காரணம் என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். 

Tags:    

Similar News