காங்கயத்தில் 20 பவுன் நகை, ரூ.10 ஆயிரம் திருட்டு; போலீசார் விசாரணை

காங்கயத்தில் அரிசி ஆலை உரிமையாளரின் வீட்டில் 20 பவுன் நகை, ரூ.10 ஆயிரம் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2022-08-15 03:58 GMT

காங்கயத்தில், வீட்டு கதவுகளை உடைத்து,  20  பவுன் நகைகள்,  10  ஆயிரம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

காங்கயம் அய்யாசாமி நகர் காலனியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. அரிசி ஆலை உரிமையாளர். கிருஷ்ணமூர்த்தி, நேற்று காலை 10 மணியளவில் குடும்பத்துடன் திருப்பூரில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றார். பின்னர் மதியம் 2 மணிக்கு வீட்டுக்குத் திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் இரண்டு கதவுகளும் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது அங்கிருந்த பீரோவும் உடைக்கப்பட்டு, அதில் வைக்கப்பட்டிருந்த 20 பவுன் நகை மற்றும் ரூ.10 ஆயிரம் திருட்டு போனது தெரிய வந்தது.

இது குறித்து காங்கயம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் உடனடியாக வந்து விசாரணை நடத்தினர்.  கைரேகை நிபுணர்களும் வந்து ஆய்வு மேற்கொண்டனர். வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை தீவிரமாகத் தேடி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

Similar News