விசைத்தறியாளர் கூலி பிரச்னை: தெக்கலுாரில் கடையடைப்பு

விசைத்தறியாளர்களின் கூலி உயர்வு ஒப்பந்த பிரச்னையை முன்வைத்து, தெக்கலுாரில் கடையடைப்பு நடந்தது.

Update: 2022-02-26 01:30 GMT

கோவை, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தினர், கூலி உயர்வு ஒப்பந்த பிரச்னையை முன்வைத்து, காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக நேற்று பல்லடம் காரணம்பேட்டையில், உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். இதையொட்டி, அவினாசி அருகேயுள்ள தெக்கலுாரில் உள்ள வியாபாரிகள் கடைகளை அடைத்து ஆதரவளித்தனர்.

Tags:    

Similar News