கோவிலில் பக்தர்கள் கூட்டம்: சூரசம்ஹாரம் பார்க்க ஆர்வம்

அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் அனுமதி மறுக்கப்பட்டு இருப்பினும்,சூரசம்ஹாரத்தை பார்க்க பக்தர்கள் அதிகளவில் வந்தனர்.

Update: 2021-11-09 16:15 GMT

அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில், சூரசம்ஹாரத்தை பார்வையிட வந்த பக்தர்கள்.

அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில், அனுமதி மறுக்கப்பட்ட நிலையிலும், அதிகளவு பக்தர்கள் சூரசம்ஹாரத்தை பார்வையிட வந்தனர். இன்று, கோவில்களில் கந்த சஷ்டி சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது. கொரோனா தொற்று பரவலை முன்னிட்டு, பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இருப்பினும், அதிகளவு பக்தர்கள் சூரசம்ஹார நிகழ்வில் பங்கேற்று வழிபட வந்தனர். தொடர்ந்து, அபிஷேக அலங்கார ஆராதனை நடத்தப்பட்டது. 108 சங்காபிஷேக பூஜையும் நடத்தப்பட்டது.

Tags:    

Similar News