உள்ளாட்சி தேர்தல்: வள்ளியூர் ஊராட்சி ஒன்றியத்தில் சுயேட்சை வேட்பாளர் வெற்றி

வள்ளியூர் ஊராட்சி ஒன்றியத்தில் வார்டு எண் 1ல் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் ரெகேனா ஜாவித் வெற்றி பெற்றுள்ளார்.

Update: 2021-10-12 07:39 GMT

ஊரக உள்ளாட்சி தேர்தலில் திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு கடந்த 6 மற்றும் 9ம் தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் வாக்குப் பதிவுகள் அனைத்தும் இன்று எண்ணப்படுகிறது.

நெல்லை மாவட்டத்தில் பாளையங்கோட்டை, மானூர், பாப்பாகுடி, சேரன்மாதேவி, அம்பாசமுத்திரம், வள்ளியூர், களக்காடு, ராதாபுரம், நாங்குநேரி ஆகிய ஒன்பது ஊராட்சி ஒன்றியங்களில் 1188 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்கு பதிவுகள் 9 வாக்கு எண்ணும் மையத்தில் எண்ணும் பணி இன்று காலை துவங்கியது.

இதனை தாெடர்ந்து வள்ளியூர் ஊராட்சி ஒன்றியத்தில் வார்டு எண் 1ல் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் ரெகேனா ஜாவித் 74 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். 107 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இரண்டாம் இடம் பிடித்த திமுக வேட்பாளர் பானுமதி செல்லாத வாக்குகளை மீண்டும் எண்ண வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

Tags:    

Similar News