கூடன்குளம் அருகே ஓட்டுப் போடாத தம்பதி மீது தாக்குதல்: வாலிபர் கைது

கூத்தங்குழி பகுதியைச் சேர்ந்த சிலுவை அம்மாள் என்பவர் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார்.

Update: 2021-10-16 06:48 GMT

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தை அடுத்துள்ள கூத்தங்குழி பகுதியைச் சேர்ந்த சிலுவை அம்மாள் என்பவர் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார்.

ஆத்திரத்தில் சிலுவை அம்மாள் அவரது மகன் மற்றும் உறவினர்கள் என 8 பேர் அதே பகுதியை சேர்ந்த தியாகு என்பவரையும், அவருடைய மனைவியையும் நேரில் சந்தித்து ஒரே தெருவில் வசிக்கும் நீங்கள் ஓட்டு போடாமல் தோற்கடித்து விட்டீர்களே என அவதூறாக பேசி தம்பதியினரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

இது குறித்து கிடைத்த புகாரின் பேரில் கூடங்குளம் போலீசார் வழக்குபதிவு செய்து வியாகுலம், (34) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News