சேரன்மகாதேவி ஒன்றிய சேர்மன் பதவியை திமுக கைப்பற்றியது

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி ஊராட்சி ஒன்றிய சேர்மன் பதவியை திமுக கைப்பற்றியது.

Update: 2021-10-12 23:17 GMT

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

திருநெல்வேலி மாவட்டம் சேரன மகாதேவி ஊராட்சி ஒன்றியத்தில் ஐந்து ஒன்றிய கவுன்சிலர் பதவி உள்ளது. இதில் திமுக மூன்று இடங்களை கைப்பற்றியது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் ஒரு இடத்தில் வெற்றி பெற்றுள்ளது. அதிமுக ஒரு இடத்தில் வெற்றி பெற்றுள்ளது.

1வது வார்டில் ஆனந்த லட்சுமி, 3வது வார்டில் பூங்கோதை, 5 வது வார்டில் கனகமணி கஸ்தூரிபாய் ஆகிய மூன்று பேர் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.

2 வது வார்டில் ராகவன் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 4வது வார்டில் ராணி காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

Tags:    

Similar News