திருநெல்வேலி மாநகரத்தில் நாளை மின் தடை-மின்வாரியம் சார்பில் அறிவிப்பு

சாலை விரிவாக்கப் பணி காரணமாக மின் கம்பம் மற்றும் மின் பாதை மாற்றி அமைக்கும் பணிகள்- நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்து மின்வாரியம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Update: 2021-07-21 13:53 GMT
பைல் படம்

திருநெல்வேலி மாநகரத்தில் நாளை மின் தடை -மின்வாரியம் அறிவிப்பு

சாலை விரிவாக்கப் பணி காரணமாக மின் கம்பம் மற்றும் மின் பாதை மாற்றி அமைக்கும் பணிகள் நடைபெற உள்ளதால் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்து மின்வாரியம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் திருநெல்வேலி செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்... நாளைய மின்தடை குறித்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாநகர் தியாகராஜ நகர் துணை மின் நிலையத்தில் உள்ள சிவந்திப்பட்டி மின்பாதையில் நாளை 22 ஆம் தேதி அதாவது வியாழக்கிழமை அன்று ஸ்மார்ட் சிட்டிக்கான சாலை விரிவாக்கப் பணி காரணமாக மின் கம்பம் மற்றும் மின் பாதை மாற்றி அமைக்கும் பணிகள் நடைபெற உள்ளதால் அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

மேலும் மின்னோட்டத்திற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகள் போன்றவற்றை அகற்றி மின் பாதையை பராமரிக்க ஒத்துழைப்பு நல்கும் படி பொதுமக்கள் அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் பொறியாளர் முத்துக்குட்டி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் தியாகராஜநகர் தாமிரபரணி நியூ நேரு நகர் மற்றும் சிவந்திபட்டி என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



 


Tags:    

Similar News