நெல்லை அருகே முன்விரோதம் காரணமாக ஒருவர் வெட்டிக்கொலை

வீரவநல்லூர் அருகே கொலை நடந்த சம்பவ இடத்தில் மாவட்ட கண்காணிப்பாளர் மணிவண்ணன் நேரில் சென்று விசாரணை

Update: 2021-11-28 17:15 GMT

வீரவநல்லூர் அருகே கொலை  சம்பவம் நடந்த இடத்தில் நேரில் சென்று விசாரணை நடத்திய மாவட்ட  காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் 

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே வெள்ளாங்குழியில முன்விரோதம் காரணமாக ஒருவர் கொலை செய்யப்பட்டார்.

நெல்லை மாவட்டம், வீரவநல்லூர் அருகே உள்ள வெள்ளாங்குளியை சேர்ந்த கணபதி மகன் ஆறுமுகம்(40). இவருக்கும் இதே ஊரை சேர்ந்த மாசானத்துக்கும் சில நாட்களுக்கு முன்பு மாடு மேய்ப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த முன் விரோதத்தில், நேற்று இரவு மாடு மேய்த்து விட்டு, வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்த ஆறுமுகத்தை, ஊர் எல்லையில் மாசானமும் மற்றொருவரும் வழிமறித்து தகராறு செய்துள்ளனர். அப்போது மாசானம், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால், ஆறுமுகத்தை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த ஆறுமுகம் அதே இடத்தில் இறந்தார். சம்பவ இடத்திற்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன்  நேரில்  சென்று  விசாரணை மேற்கொண்டார்.  வீரவநல்லூர் போலீசார் கொலை குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News