திருச்சி மாவட்ட கூட்டுறவு சங்கங்களுக்கு புதிய மண்டல இணைப்பதிவாளர் பணியேற்பு
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில் தொடர்ந்து ஒவ்வொரு துறையிலும் அதிகாரிகள் பணியிட மாற்றம் நடைபெற்று வருகிறது.;
திருச்சிராப்பள்ளி மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளராக ஜெயராமன் பொறுப்பேற்றுக் கொண்டார்.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், தொடர்ந்து ஒவ்வொரு துறையிலும் அதிகாரிகள் பணியிட மாற்றம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தலைமைச்செயலகத்தில் ஆரம்பித்து, மாவட்ட பணியாற்றிவந்த மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட வருவாய் அலுவலர்கள், காவல் துறையினர் என தொடர்ந்து பல மாற்றங்கள் நடைபெற்று வருகிறது. தற்போது கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர்களும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.