கோவில்பட்டி புற்றுகோவிலில் மகாசங்கடஹர சதூர்த்தி பூஜை

கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் புற்று கோவிலில் சங்கடஹரசதுர்த்தி பூஜை வெகு சிறப்பாக நடைபெற்றது

Update: 2021-08-25 12:23 GMT

கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோவிலில் மகா சங்கடஹர சதூர்த்தி பூஜை நடைபெற்றது. இதனையொட்டி மாலை கணபதி பூஜையுடன் தொடங்கி, ஸ்தபன கும்பகலச பூஜை, யாகசாலை பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மூல மந்திர ஹோமம், பூர்ணாகுதி தீபாரதனை நடைப்பெற்றது. பிறகு கோடிசக்தி விநாயகருக்கு மாலை, மஞ்சள், பால், தேன், விபுதி, பன்னீர், சந்தனம் போன்ற 18 வகையான சிறப்பு அபிஷேக அலங்கார திபாராதனை நடைபெற்றது.

பூஜைகளை சுப்பிரமணிய அய்யர் செய்யதுவைத்தார். இவ்விழாவில் கோவில் தலைவர் ராஜபாண்டி, பொருளாளர் சுப்பிரமணி மற்றும் சுற்று வட்டார மக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு இனிப்பு பிரசாதமாக வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை தேவகி, ரவிநாரயணன், ராஜேஸ்வரி,ரம்யா செய்து இருந்தனர்.

Tags:    

Similar News