கோவில்பட்டியில் மாவு அரவை மில்களில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 12 டன் அரிசி பறிமுதல் - அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்ட மாவட்ட ஆட்சியர்

மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பெயரில் நேற்று இரவு முதல் நடைபெற்ற சோதனையை பொதுமக்கள் வரவேற்றுள்ளது மட்டுமின்றி, மாவட்ட ஆட்சியருக்கு நன்றியும் தெரிவித்துள்ளனர்.

Update: 2021-07-21 15:33 GMT


தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் உள்ள மாவு அரவை மில்லில் நியாயவிலைக்கடைகளில் இலவசமாக வழங்கப்படும் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ்க்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையெடுத்து மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பெயரில் கோட்டாட்சிய சங்கரநாரயணன், தாசில்தார் அமுதா, கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் சுஜித் ஆனந்த், வட்டவழங்கல் அலுவலர் செல்வக்குமார் கொண்ட குழுவினர் பல்வேறு இடங்களில் சோதனை மேற்;க்கொண்டனர்.

அப்போது கடலைக்கார தெருவில் விஜய் என்பருக்கு சொந்தமான மாவு அரவை மில், சின்னகருப்பசாமி கோவில்தெரு, கருவாட்டுப்பேட்டை தெருவில் கண்ணன் என்பவருக்கு சொந்தமான மாவு அரவை மில் ஆகியவற்றில் சோதனை நடத்திய போது, அங்கு ரேஷன் அரிசி, கோதுமை ஆகியவை பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சோதனையில் 242 ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

ரேஷன் அரிசி மட்டுமின்றி, அவவை அரவைசெய்யப்பட்ட மாவு மூட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. நேற்று இரவு முதல் இன்று மதியம் வரை நடைபெற்ற சோதனையில் 12டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து காவல்துறை மூலம் வழக்கு பதிவு செய்யப்பட்டு ரேஷன் அரிசி பதுக்கி வைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பெயரில் இரவு முதல் பகல் வரை நடைபெற்ற சோதனையில் 12டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. கோவில்பட்டி நகரில்  பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது மட்டுமின்றி, உரிய நேரத்தில் நடவடிக்கை மேற்கொண்ட மாவட்ட ஆட்சியருக்கு பொது மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News