டீ,வடை சாப்பிட்ட 4 இளைஞர்கள் வாந்தி மயக்கம்: அரசு மருத்துவமனையில் அனுமதி

டீ,வடை சாப்பிட்ட 4 இளைஞர்கள் வாந்தி மயக்கம்

Update: 2021-05-04 10:00 GMT

திருத்துறைப்பூண்டியில் வாந்தி மயக்கம் ஏற்பட்ட இளைஞர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

திருவாரூர் மாவட்டம்,   திருத்துறைப்பூண்டி பள்ளிவாசல் தெருவை சேர்ந்த கஜேந்திரன் மகன்  சதீஸ் (24), சம்பத் மகன் பார்த்திபன்(20). மலர் மகன்  வசந்த்(22)  சம்பத் மகன், ஹரிஹரன்(23).  4 இளைஞர்கள் இன்று காலை திருத்துறைப்பூண்டி பெரிய கோயில் அருகே உள்ள ஒரு டீக்கடையில் டீ வடை சாப்பிட்டு உள்ளனர்.  டீ வடை சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே 4 இளைஞர்களுக்கும் வாந்தி மயக்கம் வந்துள்ளது.


உடனடியாக அவர்களை உறவினர்கள் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். 4 இளைஞர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திருத்துறைப்பூண்டி பகுதியில் சில கடைகளில் சுகாதாரமற்ற வகையில் உணவுகள் தயாரிக்கப்படுவதாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது. உடனடியாக சுகாதாரத்துறை உணவு வழங்கல் துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News