தூய்மை பணியாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கிய எம்எல்ஏ

திருவாரூரில் தூய்மை பணியாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை பூண்டி கலைவாணன் எம்எல்ஏ வழங்கினார்.

Update: 2021-05-15 16:30 GMT

திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் திருவாரூர் நகராட்சியில் பணிபுரியும் 200 க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு அரிசி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் வழங்கினார்.

நாடு முழுவதும் கொரனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக தற்போது தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.இதனால் பொது மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில் இன்று முதல் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் முதல் தவணையாக 2000 ரூபாய் வழங்கப்பட்டுகிறது.

மேலும் முன்களபணியாளராக செயல்பட்டுவரும் தூய்மை பணியாளர்களுக்கு திருவாரூர் சட்டமன்ற அலுவலகத்தில் 10 கிலோ அரிசி மற்றும் உளுத்தம்பருப்பு, துவரம்பருப்பு, சீனி, மஞ்சள் தூள் உள்ளிட்ட மளிகை பொருட்கள், சோப்பு போன்ற பொருட்கள் அடங்கிய பையை திருவாரூர் நகராட்சியில் பணிபுரியும் 200க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்களுக்கு திருவாரூர் சட்டமன்ற உறுப்பரும் மாவட்ட கழக செயலாளர் பூண்டி கலைவாணன் வழங்கினார்.

Tags:    

Similar News