திருத்துறைப்பூண்டி அருகே மீனவர் தூக்குப்போட்டு தற்கொலை

திருத்துறைப்பூண்டி அருகே மீனவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்தது பற்றி போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

Update: 2022-03-01 10:26 GMT

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அலையாத்திக்காடு கந்தபரிச்சான் ஆறு வாய்கால் அருகே ஒருவர் தூக்கில் தொங்குவதாக முத்துப்பேட்டை போலீசாருக்கு தகவல் வந்தது. இதனையடுத்து இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி விசாரணை செய்தனர்.

இதில் தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள துவரங்குறிச்சி மன்னங்காடு கிராமத்தை சேர்ந்த காமாட்சி மகன் மீனவர் வீரப்பன்(65) என்றும் இவர் குடும்பத்தை விட்டு பிரிந்து பல ஆண்டுகளாக முத்துப்பேட்டை அடுத்த உதயமார்த்தாண்டபுரம் தெற்கு பள்ளியமேடு கிராமத்தில் வசித்து கடலுக்கு சென்று மீன் பிடித்து வந்ததாகவும், இவர் சில தினங்களாக கடும் மன உளைச்சலில் இருந்ததாகவும் ,இதனால் தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதனையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் மீனவர் வீரப்பன் உடலை மீட்டு பிரேதப்பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News