காதல் பிரச்சினையில் சிக்கிய 11-ம் வகுப்பு பள்ளி மாணவி தற்கொலை

திருத்துறைப்பூண்டி அருகே முகநூலில் சர்ச்சைக்குரிய வகையில் புகைப்படங்கள் வெளியானதால், மனமுடைந்த மாணவி தற்கொலை செய்தார்.

Update: 2022-02-15 16:07 GMT

திருத்துறைப்பூண்டி காவல் நிலையம் (பைல் படம்).

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே பாமணி பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து மகள் சந்தியா (15). இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஓட்டுநர் லோகேஷ் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை சந்தியாவின பெற்றோர் கண்டித்துள்ளனர்.

இந்நிலையில், மாணவி சந்தியாவின் புகைப்படத்தை சர்ச்சைக் குரிய வகையில் முகநூலில் லோகேஷ் பதிவிட்டாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட சந்தியா, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இது குறித்து அறிந்த அக்கம்பக்கத்தினர் திருத்துறைப்பூண்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மாணவியின் தற்கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News