திருத்துறைப்பூண்டி: மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர் வழங்கும் நிகழ்ச்சி

திருத்துறைப்பூண்டியில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 6,88,500 மதிப்பிலான இணைப்பு சக்கர ஸ்கூட்டர்கள் வழங்கப்பட்டது.

Update: 2021-12-02 13:17 GMT

திருத்துறைப்பூண்டியில் நடந்த நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர் வழங்கப்பட்டது.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 2020-21ஆம் ஆண்டிற்கு இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தின்கீழ், தேர்வு குழு மூலம் தேர்வு செய்யப்பட்ட 9 நபர்களுக்கு மோட்டார் பொருத்தப்பட்ட மூன்று சக்கர வாகனம் வழங்கும் விழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சட்ட மன்ற உறுப்பினர் மாரிமுத்து மாற்றுதிறனாளிகளுக்கு ரூ 6,88,500 மதிப்பிலான இணைப்பு சக்கர ஸ்கூட்டர்களை 9 பயனாளிகளுக்கு வழங்கினார். 

இதில் ஒன்றிய ஆணையர்கள் சுப்பிரமணியன், சிவகுமார் , தாசில்தார் அலெக்சாண்டர், தனி வட்டாட்சியர் தனசேகரன், மாவட்டமாற்றுதிறனாளி நல அலுவலர் புவனேஸ்வரி மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர். 

Tags:    

Similar News