திருத்துறைப்பூண்டி அருகே கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா

திருத்துறைப்பூண்டி அருகே நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் கர்ப்பிணி பெண்களுக்கு 15 வகை சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது.

Update: 2021-12-14 15:45 GMT

திருத்துறைப்பூண்டிஅருகே நடந்த சமுதாய வளைகாப்பு விழாவில் கர்ப்பிணி பெண்களுக்கு சீர் வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது.

திருவாரூர்  மாவட்டம்  திருத்துறைப்பூண்டி அருகே மேட்டுப்பாளையம்  கிராமத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை , ஒருங்கினைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில்  100-க்கும் மேற்பட்ட  கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா தனியார் திருமண அரங்கில்  நடைபெற்றது .

இதில் திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, கோட்டூர் ஒன்றியத்திற்குட்பட்ட  கிராமங்களில் வசிக்கும்  100-க்கும் மேற்பட்ட  கர்ப்பிணி  பெண்களுக்கு வளைகாப்பு நடத்தப்பட்டு, சேலைகள், மஞ்சள், குங்குமம், பூ, பழம், பேரீச்சம்பழம், கடலைமிட்டாய் உள்ளிட்ட  15 வகையான பொருட்கள் சீர் வரிசையாக வழங்கப்பட்டது . 

இந்நிகழ்ச்சியில் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து, குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் கண்ணகி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News