நன்னிலம் அருகே சிறுவனை பாலியல் ரீதியாக துன்புறுத்தியவர் போக்ஸோ சட்டத்தில் கைது

Update: 2021-09-28 17:00 GMT

 நன்னிலம் அருகே  போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட மகேந்திரன்

நன்னிலம் அருகே 11 வயது சிறுவனை  பாலியல் வன்கொடுமை  செய்த நபரை  போக்ஸோ சட்டத்தின்கீழ்  போலீஸார் கைது செய்தனர்.

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே நீலக்குடி பஜனைமட தெருவைச் சேர்ந்த  மகேந்திரன்( 42.) இவர் பரோட்டா மாஸ்டர் ஆக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில், மகேந்திரனின் மனைவி  வீட்டைவிட்டு வெளியே சென்றிருந்த நேரத்தில், வீட்டின் அருகே உள்ள ஆறாம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுவனை ஓரினச்சேர்க்கைக்கு அழைத்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, சிறுவனின் பெற்றோர் நன்னிலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். புகாரின் அடிப்படையில் மகேந்திரனை போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர்.

Tags:    

Similar News