மன்னார்குடி மருத்துவமனைக்கு சேவை சங்கங்கள் சார்பில் 20 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவி

மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு சேவை சங்கங்கள் சார்பில் எம்எல்ஏ டிஆர்பி ராஜா 20 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகளை வழங்கினார்.

Update: 2021-06-02 10:00 GMT

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சேவை சங்கங்களின் சார்பில் ஆக்சிஜன் செறிவூட்டும் கருவியினை எம்எல்ஏ டிஆர்பி ராஜா வழங்கினார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு சமூக சேவை சங்கத்தின் சார்பில் 21 இலட்சம் மதிப்பிலான 20 ஆக்ஸிஜன் செறிவூட்டல் , 20 சிலிண்டர்கள் ,உள்ளிட்ட 200க்கு மேற்பட்ட நோயாளிகள் பயன்பெறும் மருத்துவ உபகரணங்களை மன்னார்குடி சட்ட மன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜாவிடம் தனியார் சேவை சங்கத்தினர் வழங்கினர். அதனை மருத்துவமனை அதிகாரியிடம் எல்எல்ஏ வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் விஜயகுமார் உள்ளிட்ட மருத்துவர்கள் ,செவிலியர்கள் மற்றும் சமூக சேவை சங்கத்தின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News