மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் புஷ்பயாகம் நடைபெற்றது

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள ராஜகோபாலசுவாமி கோயிலில் புஷ்பயாகம் வெகு விமர்சையாக நடைபெற்றது

Update: 2022-04-08 15:52 GMT

மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் புஷ்பயாகம்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் நடைபெற்ற பங்குனி திருவிழாவின் பிரம்மோற்சவத்தின் நிறைவாக புஷ்பயாகம் நடைபெற்றது.

ராஜகோபாலசுவாமி கோவிலில் உள்ள பள்ளியறை முன்பு ருக்மணி, சத்யபாமா சமேதராக ராஜகோபாலசுவாமி அருள்பாலித்தார். அப்போது பல்வேறு வகையான மலர்களை கொண்டு சுவாமிகளுக்கு 2 மணி நேரம் வேத மந்திரங்கள் முழுங்க புஷ்பங்களை கொண்டு அபிஷேகம் செய்தனர்.

அதனை தொடர்ந்து பெருமாளுக்கு தீபஆராதனை காண்பிக்கபட்டது இதில் ஏராளமான பக்த்தர்கள் அமர்ந்து பெருமாளை தரிசனம் செய்தனர். 

Tags:    

Similar News