திருவாரூர்:மாவட்ட ஊராட்சி உறுப்பினர் தேர்தலுக்கான செயல்வீரர்கள் கூட்டம்

திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள ஊராட்சி உறுப்பினர் இடைத்தேர்தலுக்கான செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

Update: 2021-09-21 11:30 GMT

திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது.

தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் தேதியை மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதுஅக்டோபர் 6-ம் தேதி மற்றும் 9-ம் தேதிகளில் இரண்டுகட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலுடன் மற்ற மாவட்டங்களில் காலியாக உள்ள ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் 2019-ல் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த அ.தி.மு.க. உறுப்பினர் மகாலிங்கம் உயிரிழந்துள்ளார் அதற்கான இடைத்தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி தி.மு.க. வேட்பாளர் அறிமுக செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.


இக்கூட்டத்தில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட செயலாளருமான பூண்டிகலைவாணன் , மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு , தலைமை செயற்குழு உறுப்பினர்.ஞானசேகரன் , ஓன்றிய செயலாளர்கள் கிழக்கு ஐ .வி.குமரேசன், மேற்கு தன்ராஜ் , மாவட்ட பிரதிநிதி செல்வம், உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய ,நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த இடைதேர்தலில் அதிக வாக்குகள் பெற்று தி.மு.க. வேட்பாளரை வெற்றி பெற வைக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

Tags:    

Similar News