தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண உதவி வழங்கிய எம்எல்ஏ

கூத்தாநல்லூர் தூய்மை பணியாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் வழங்கினார் .

Update: 2021-05-17 13:15 GMT

நாடு முழுவதும் கொரனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக தற்போது தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.இந்நிலையில்,

கொரானவை கட்டுப்படுத்ததும், முன்களபணியாளராக செயல்பட்டுவரும் தூய்மை பணியாளர்களுக்கு திருவாரூர் மாவட்டம் கூத்தநல்லூர் நகராட்சி அலுவலகத்தில் ரூ ஆயிரம் மதிப்புள்ள 10 கிலோ அரிசி மற்றும் உளுத்தம்பருப்பு, துவரம்பருப்பு, உள்ளிட்ட நிவாரண பொருட்களை எம்எல்ஏ கலைவாணன் வழங்கினார்.. இந்நிகழ்ச்சியில் நகர செயலாளர் காதர் உஷேன் , நகராட்சி ஆணையர் லதா உள்ளிட்ட அரசு அதிகாரிகள் , திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் 

Tags:    

Similar News