மாநில அளவிலான மகளிர் கபடி போட்டியில் சென்னை போலீஸ் அணி சாம்பியன்
வடுவூர் அருகே மாநில அளவிலான மகளிர் கபடி போட்டியில் சென்னையை சேர்ந்த சிட்டி போலீஸ் அணியினர் முதல்பரிசை வென்றனர்.;
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்துள்ள கட்டக்குடி கிராமத்தில் கட்டக்குடி விளையாட்டுகழகம் சார்பாக மாநில அளவிலான மகளிர் கபடி போட்டி நடத்தப்பட்டது . இதில் திருச்சி , கோயமுத்தூர் , மதுரை , ராமநாதபுரம் , கண்யாகுமரி , திண்டுக்கல் , கட்டக்குடி ,உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய பகுதிகளில் இருந்து 28 அணியினர் களம் இறங்கினர் .
இரண்டுநாள் ஆட்டத்தின் இறுதியில் சென்னை சிட்டி போலீஸ் அணியினர் முதல் பரிசு 50 ஆயிரத்திற்கான காசோலையையும் கோப்பையையும் , ஒட்டஞ்சத்திரம் வெண்ணிலா கபடி. அணியினர் இரண்டாம் பரிசு 40 ஆயிரத்திற்கான காசோலையும் கோப்பையையும் வென்றனர் .