கஞ்சா கடத்திய பெண்கள் கைது

தேனியில் டூ வீலரில் கஞ்சா கடத்திய இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-06-29 09:45 GMT

பைல் படம்.

தேனி எஸ்.ஐ., முருகானந்தம் தலைமையில், போலீசார் புதுபஸ்ஸ்டாண்டில் இருந்து சிவாஜிநகர் செல்லும் ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தேனி விஸ்வநாத தாஸ் காலனியை சேர்ந்த பிரியங்கா, 28, சக்கரைப்பட்டியை சேர்ந்த லோகராணி, 41 ஆகியோர் டூ வீலரில் புதுபஸ்ஸ்டாண்ட் நோக்கி சென்றனர். இவர்களை எஸ்.ஐ., முருகானந்தம் மடக்கி சோதனை செய்தார். இவர்கள் டூ வீலர் சீட்டுக்கு அடியில் ஒண்ணரை கிலோ கஞ்சாவை வைத்து கடத்திச் சென்றது சோதனையில் தெரியவந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் இரண்டு பெண்களையும் கைது செய்தனர்.

Tags:    

Similar News