வழிப்பறி திருடர்கள் 2 பேர் குண்டர்தடுப்பு சட்டத்தில் கைது

பெரியகுளம் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட இரண்டு பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-05-19 07:24 GMT

பைல் படம்.

பெரியகுளம் அழகர்சாமிபுரத்தை சேர்ந்தவர் சின்னப்பாண்டி, 24. எண்டப்புளி புதுக்கோட்டையை சேர்ந்தவர் இஸ்ரேல் 23. இவர்கள் இருவரும் பல பகுதிகளில் வழிப்பறி, திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டனர்.  இவர்கள் மீது தேனி ஆண்டிபட்டி, பெரியகுளம், வடகரை ஸ்டேஷன்களில் பல வழக்குகள் உள்ளன. இந்நிலையில் இவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் முரளீதரன் உத்தரவிட்டார். போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News