கும்பக்கரை அருவியில் குளித்து மகிழும் பயணிகள்

இரண்டு ஆண்டு இடைவெளிக்கு பின்னர், கும்பக்கரை அருவிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.

Update: 2022-03-18 03:14 GMT

பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் குளித்து மகிழும் பயணிகள்.

தேனி மாவட்டத்தில் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவி கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல், மழை வெள்ள பாதிப்பு காரணமாக மூடப்பட்டு இருந்தது. கொரோனா தற்போது பெரும் கட்டுக்குள் வந்துள்ளது. அருவியிலும் வெள்ளப்பெருக்கு குறைந்து சீரான நீர் வரத்து உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க அதிகளவில் வருகின்றனர். இங்கு வனத்துறை சார்பில் பயணிகளை பாதுகாக்க பல்வேறு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

Tags:    

Similar News