டிப்பர் லாரி மோதி கூலித்தொழிலாளி உயிரிழப்பு
பெரியகுளம் அருகே டிப்பர் லாரி மோதிய விபத்தில் தென்னை மரம் ஏறும் தொழிலாளி உயிரிழந்தார்
பெரியகுளம் கல்லுப்பட்டியை சேர்ந்தவர்கள் ராகவன்( 36,) வீரக்குமார்( 22.) தென்னை மரம் ஏறும் தொழிலாளிகளான இவர்கள் இருவரும் வத்தலக்குண்டில் இருந்து பெரியகுளம் நோக்கி டூ வீலரில் வந்து கொண்டிருந்தனர். தேவதானப்பட்டி அருகே எதிரே வந்த டிப்பர் லாரி டூ வீலர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே ராகவன் உயிரிழந்தார். வீரக்குமார் காயத்துடன் உயிர் தப்பினார். தேவதானப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.