தேனி மாவட்டத்தில் 66.27 சதவீதம் மாணவ, மாணவிகள் பள்ளிகளுக்கு வந்தனர்

தேனி மாவட்டத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டதால் மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் பள்ளிகளுக்கு வந்தனர்

Update: 2021-09-01 14:15 GMT

தேனியில் இன்று பள்ளிகளுக்கு வந்த மாணவிகள் உடல் வெப்ப பரிசோதனைக்கு பின்னரே வகுப்புகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தேனி மாவட்டத்தில் இன்று 225 உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் திறக்கப்பட்டன. 66.27 சதவீதம் மாணவ, மாணவிகள் வந்தனர். தேனி மாவட்டத்தில் அரசு உத்தரவுப்படி இன்று 225 உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் திறக்கப்பட்டன. மொத்தம் 63 ஆயிரத்து 670 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இவர்களில் 42 ஆயிரத்து 195 பேர் இன்று வகுப்புகளுக்கு வந்தனர். மீதம் மாணவர்கள் சுழற்சி முறையில் அடுத்து வரவழைக்கப்படுவார்கள். மாணவ, மாணவிகளுக்கு அரசு வழிகாட்டுதல்களின் படி வகுப்புகள் நடத்தப்படுகிறது எனகல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News