உத்தமபாளையம் அருகே குடும்பதகராறு காரணமாக இளம்பெண் தற்கொலை

உத்தமபாளையம் அருகே குடும்பதகராறு காரணமாக இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-05-21 03:51 GMT

பைல் படம்.

தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே காக்கில்சிக்கையன்பட்டியை சேர்ந்தவர் முருகன், டீக்கடை நடத்தி வரும் இவரது மனைவி சவுமியா, (வயது 28).

இந்நிலையில் கணவன், மனைவிக்கு இடையே குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது. இதனால் மனம் உடைந்த சவுமியா தனது வீட்டில் துாக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து உத்தமபாளையம் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News