தங்கை கணவர் கொலை: மனமுடைந்த இளைஞர் தற்கொலை

தேனி மாவட்டம், கம்பம் நகரில் தங்கையின் கணவரை கொன்றதால் மனமுடைந்த இளைஞர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-07-26 12:20 GMT

பைல் படம்.

தேனி மாவட்டம், கம்பம் கிராமச்சாவடி தெருவில் வசிப்பவர் சிவக்குமார், 29 அவரது தம்பி சங்கர் 27. கட்டிடத் தொழிலாளிகளான அண்ணன் தம்பி இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இவர்கள் இருவருக்கும் குடும்பத்தகராறு ஏற்பட்டதில் அண்ணன் சிவகுமாரை அவரது தம்பி சங்கர் கத்தியால் குத்துவதற்கு முயற்சி செய்தார். அப்போது இருவருக்கும் ஏற்பட்ட தகராறை சமாதானம் செய்ய முயற்சி செய்த அவரின் தங்கையின் கணவர் காளிராஜ் 32 மீது கத்திக்குத்து விழுந்தது.

கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரும் முன் அவர் உயிரிழந்தார். இந்த தகவலை அறிந்த அண்ணனை கத்தியால் குத்தி கொலை செய்ய முயற்சி செய்த சங்கர், தவறுதாக ஆத்திரத்தில் தங்கையின் கணவரை கத்தியால் குத்தி கொன்று விட்டோம் என்று மனம் உடைந்து அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் அறிந்த கம்பம் தெற்கு காவல் நிலைய போலிசார் பிரேதத்தை கைப்பற்றி கம்பம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News