தேனியில் கஞ்சா விற்ற கணவன்- மனைவி கைது

தேனியில் கஞ்சா விற்ற கணவன்- மனைவியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-05-03 06:14 GMT

தேனி மஞ்சிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ராஜபிரபு(வயது 37.) இவரது மனைவி பிரியா,( 33.) இவர்கள் கெப்புரெங்கன்பட்டி பெருமாள்கோயில் அருகில் கஞ்சா விற்றுக் கொண்டிருந்தனர். அங்கு ரோந்து சென்ற பழனிசெட்டிபட்டி போலீசார் ராஜபிரபு விற்பனைக்கு வைத்திருந்த ஒரு கிலோ 250 கிராம் கஞ்சாவை கைப்பற்றினர். அவரது மனைவி பிரியா தன் வீட்டின் அருகே விற்பனைக்கு வைத்திருந்த ஒரு கிலோ 100 கிராம் கஞ்சாவையும் கைப்பற்றினர். இருவரையும் கைது செய்தனர்.

Tags:    

Similar News