திமுகவுடன் ரகசிய ஒப்பந்தம்..பாஜகவுடன் நிர்பந்தம்: கொந்தளிக்கும் முன்னாள் எம்பி

எம் ஜி ஆர் உடன் பழகியவரும் அதிமுகவின் முன்னாள் எம்.பி. யுமான கே.சி. பழனிச்சாமி இவ்வாறு குற்றம் சாட்டினார்

Update: 2023-04-07 07:45 GMT

பைல் படம்

எம்ஜிஆர் உடன் பழகிய வரும் அதிமுகவின் முன்னாள் எம்.பி. யுமான கே.சி. பழனிச்சாமி,  திமுகவுடன் ரகசிய ஒப்பந்தத்தையும் பாஜகவுடன்  கூட்டணியும் வைத்துள்ளதாக  குற்றம் சாட்டினார் .

தற்போதைய திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின், திமுகவிற்கு ஒரு கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று உத்தரவிட அக்கட்சியினர் அதற்கான வேலைகளில் தீவிரமாக களம் இறங்கி இருக்கின்றனர். இதை அடுத்து அதிமுகவின் தற்போதைய பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும் அதிமுகவின் உறுப்பினர்கள் பட்டியலை 2 கோடியாக உயர்த்த வேண்டும் என்று கட்சியினருக்கு உத்தரவிட, புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் அக்கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இது ஒரு புறம் இருக்க, பாஜகவின் ஆதரவாளர் ஓபிஎஸ் என்ற பேச்சு மறைந்து, இப்போது எடப்பாடி பழனிச்சாமிக்குத் தான் பாஜக ஆதரவளிக்கிறது என்று ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சொல்லி வருகின்றனர். நீதிமன்றத்தில் எடப்பாடி பக்கம் தீர்ப்பு சாதகமாக வந்ததால், அவரது ஆதரவாளர்கள் கொண்டாடி தீர்த்தனர். அப்போது எம்ஜிஆரை போலவே தொப்பி, கண்ணாடி, சால்வை எடப்பாடிக்கு அணிவித்து மகிழ்ந்தார்கள். இது எம்ஜிஆர் ரசிகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து எம் ஜி ஆர் உடன் பழகியவரும் அதிமுகவின் முன்னாள் எம்.பி-யுமான கே.சி. பழனிச்சாமி,  எம்.ஜி.ஆரைப் போன்று தொப்பி அணிந்தால் உறுப்பினர்கள் சேர்ந்து விட மாட்டார்கள். பணம் மட்டும் தான் அரசியல் தலைவருக்கு உண்டான ஒரே அரிச்சுவடி என்று நம்பி திராவிட கொள்கைகளையும், நற்பண்புகளையும், உதவும் குணங்களையும் மறந்து விட்டார் எடப்பாடி பழனிசாமி என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், திமுகவுடன் எடப்பாடி பழனிசாமியும் அதிமுக முன்னாள் அமைச்சர்களும் ரகசிய ஒப்பந்தத்தில் இருக்கின்றனர். ஊழல் வழக்குகள், குட்கா வழக்குகள் மற்றும் இதுபோன்ற பிரச்னைகளில் இருந்து அவர்களைப் பாதுகாக்க மட்டுமே பாஜக கூட்டணி தேவைப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தை பயன்படுத்தி அதிமுகவை அழித்து பாஜகவை வளர்ப்பது தான் பாஜகவின் திட்டம் என்கிறார்.

Tags:    

Similar News