போடியில் இருந்து கேரளாவிற்கு கடத்திய 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

போடியில் இருந்து கேரளாவிற்கு கடத்திய 2 டன் ரேஷன் அரிசியை ஜீப்புடன் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2022-03-16 01:00 GMT

போடியில் இருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்திச் செ்ன்ற ஜீப் பறிமுதல் செய்யப்பட்டது.

உத்தமபாளையம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், போடி முந்தல் சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கேரளா நோக்கி சென்ற ஜீப்பினை சோதனை செய்தனர். அதில் 2 டன் ரேஷன் அரிசி மூடைகள் இருந்தன.

அவற்றை ரேஷன் கடையில் இருந்து கடத்திச் செல்வது விசாரணையில் தெரியவந்தது. அரிசியுடன் ஜீப்பை பறிமுதல் செய்த போலீசார், சம்பவம் தொடர்பாக மூன்று பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News