கள்ளநோட்டுகள் வைத்திருந்த 2 பேரை கைது செய்து போலீஸார் விசாரணை

கம்பத்தில் கள்ள நோட்டுக்களுடன் காரில் வந்த இருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Update: 2021-09-05 15:15 GMT

தேனி மாவட்டம், கம்பம் அருகே போலி ரூபாய் நோட்டுக்களை காரில் கடத்தி வந்த இருவரை ராயப்பன்பட்டி போலீசார் கைது செய்தனர்.

தேனி மாவட்டம், கம்பத்தில் கள்ள  ரூபாய் நோட்டுகளை வைத்திருந்த  இருவரை ராயப்பன்பட்டி போலீசார்  கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனி மாவட்டம், கம்பம் அருகே உள்ள ஆனைமனையன்பட்டி, வெள்ளைக்கரடு பகுதியில் ராயப்பன்பட்டி போலீசார் வாகன சோதனை நடத்தினர். அந்த வழியாக வந்த காரை மறித்து சோதனை செய்தனர். காருக்குள் 20 லட்சத்து 2 ஆயிரத்து 450 ரூபாய் மதிப்புள்ள கள்ள  ரூபாய் நோட்டுகள் இருந்தன. அவற்றை கைப்பற்றிய போலீசார் கம்பம் தினகரன் நகரை சேர்ந்த இருவரை கைது செய்தனர். இருவரும் கள்ளநோட்டு அச்சிடும் கும்பலை சேர்ந்தவர்களா, இதுவரை எவ்வளவு பணம் அச்சிட்டு புழக்கத்தில் விட்டுள்ளனர், இவர்களுக்கு பின்னணியில் உள்ளது யார், என்பது உட்பட பல்வேறு கோணங்களில் போலீசார்  விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News