பிரபாகரனின் லைவ் போட்டோ விரைவில் வெளிவரும்... வெயிட்....
Kasi Anandan-இன்னும் சில நாட்களில் பிரபாகரன் உயிருடன் வசிக்கும் போட்டோ ஆதாரங்கள் வெளிவரும் என கவிஞர் காசி ஆனந்தன் கூறியுள்ளார்.;
Kasi Anandan
Kasi Anandan-தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் புதிய புகைப்படங்கள் உள்ளிட்ட தகவல்கள் விரைவில் வெளிவரும் என ஈழத்தின் கவிஞர் காசி ஆனந்தன் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன், நலமுடன் இருப்பதாகவும், உரிய நேரத்தில் மக்கள் முன் வருவார் என உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் அறிவித்திருந்தார். பழ.நெடுமாறன் தெரிவித்த இந்த கருத்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதுடன், பிரபாகரன் உயிருடன் இல்லை என்று இலங்கை இராணுவம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இந்நிலையில், தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் புதிய புகைப்படங்கள் உள்ளிட்ட தகவல்கள் விரைவில் வெளிவரும் என மீண்டும் காசி ஆனந்தன் தகவல் வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் காசி ஆனந்தன் கூறுகையில், ‘பழ.நெடுமாறன் பொய் சொல்வார் என யாரும் கருதக்கூடாது. அவரது மனைவி, மகள் உயிருடன் இருக்கிறார்கள். இறுதி கட்ட போரில் தப்பியவர்களும் உயிருடன் உள்ளனர். பிரபாகரனின் மனைவி மதிவதனி, மகள் துவாரகா உயிருடன் இருக்கிறார்கள். ஆனால் அவரின் இரண்டு மகன்கள் உயிருடன் இல்லை. அவரின் புதிய படங்கள் உள்ளிட்ட தகவல்கள் விரைவில் வெளிவரும். ஒவ்வொரு குழுவின் தலைவரும் தங்களை தலைவராகவும், பிரபாகரனாகவும் கருதுகின்றனர். அவரின் நினைவு நாளை இதுவரை யாரும் அனுசரித்தது இல்லை. அவரும் இறுதி கட்ட போரில் தப்பியவர்களும் உயிருடன் உள்ளனர்.
பழ.நெடுமாறன் தெரிவித்த கருத்தில் வைகோ போன்ற தமிழக தலைவர்கள் பெரிதாக முரண்படவில்லை. அவர் மறைந்து வாழ மாட்டார் என்பது மறுக்கக்கூடிய கருத்து அல்ல. எனினும் ரஷ்ய போராளி லெனினும் மறைந்திருந்து போராடியவர் தான். 2009க்கு பின் வெளியேறிய போராளிகள் 30 குழுக்களாக இயங்குகின்றனர். உலக அளவில் பெரிய அரசியல் இயக்கத்தை பிரபாகரன் முன்னெடுப்பார் என கருதுகிறேன். ஈழ மக்களுக்கு இந்திய அரசால் மட்டுமே உதவ முடியும் என்பதால் நான் மதிக்கிறேன். பிரபாகரன் இருந்த காலத்தில் சீனாவினால் இலங்கையில் கால்பதிக்க முடியவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
அதனை உறுதிப்படுத்தும் வகையில், காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி திருச்சி வேலுச்சாமி, பிரபாகரன் நீர்மூழ்கி கப்பலில் தப்பித்து சென்றுள்ளதாக தற்போது ஒரு பரபரப்பு தகவலை கூறியுள்ளார். இலங்கை இறுதி போரின் போது பிரபாகரன் தப்பித்து சென்றதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. கடந்த 2009-ஆம் ஆண்டு பாரிஸில் இருந்து முக்கிய நபர் ஒருவர் அழைத்து திருச்சியில் உள்ள ஒரு இளைஞரை உதவ சொன்னாராம். அந்த இளைஞர் தான் கடைசி நேரத்தில் பிரபாகரனை காப்பாற்றி நீர் மூழ்கி கப்பலில் ஏற்றி விட்டார். அந்த இளைஞர் தற்போது ஆஸ்திரேலியாவில் இருக்கிறார் எனக் கூறியுள்ளார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2