தேனி மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் ரத்து: தேனி போலீசார் நிம்மதி

தேனி மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்குள் நாள் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டதால் போலீசார் நிம்மதி அடைந்துள்ளனர்.

Update: 2022-01-09 03:59 GMT

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம்.

தேனி கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள் கிழமை நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக கலெக்டர் முரளீதரன் அறிவித்துள்ளார்.

ஒமிக்ரான் பரவல் முடிவுக்கு வந்த பின்னர் மீண்டும் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்துவது பற்றி அறிவிப்பு வெளியாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

திங்கள் தோறும் நடைபெற்று வந்த இந்த குறைதீர்க்குள் நாள் கூட்டங்களில் சிலர் மண்ணெண்ணெய் கொண்டு வந்து தீ வைத்து தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டல் நாடகம் விடுப்பதை வழக்கமாக்கி வருகின்றனர். வாரந்தோறும் குறைந்தபட்சம் 3 பேராவது வந்து இது போல் நாடகம் ஆடுகின்றனர். இவர்களை கண்காணித்து தடுக்காவிட்டால், ஏதாவது ஒரு விபரீதம் ஆகி விடும் என்ற அச்சமும் போலீஸ் மத்தியில் உள்ளது.

இதனால் வாரந்தோறும் கலெக்டர் அலுவலகத்தில் போலீஸ் குவிக்கப்பட்டு மிகுந்த கண்காணிப்புடன் ஒவ்வொரு நபரையும் சோதனை செய்து அனுப்பி வைத்து வந்தனர். இப்போது இந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டதால் ஒரு பெரிய பிரச்னை தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News