தேனி கலெக்டருக்கு பாசிமாலை அணிவித்து வரவேற்பு

தேனி நரிக்குறவர் காலனிக்கு சென்ற கலெக்டருக்கு பாசிமாலை அணிவித்து வரவேற்பு கொடுத்தனர்.

Update: 2021-11-25 13:36 GMT

தேனி நரிக்குறவர் காலனியில் கலெக்டருக்கு பாசிமாலை அணிவித்து வரவேற்பு கொடுத்தனர்.

நரிக்குறவ பெண் அசுவனியில் பேட்டிக்கு பின்னர் அந்த சமூகத்தின் அடித்தன்மையே மாறிப்போனது. தமிழக முதல்வர் ஸ்டாலின் நரிக்குறவர் பெண் அசுவினியை சந்திக்க அவரது வீடு தேடிச் சென்றதும், அடுத்தடுத்து மாவட்ட கலெக்டர்கள் அத்தனை பேரும் தங்கள் மாவட்டங்களில் உள்ள நரிக்குறவர் காலனிகளுக்கு பல்வேறு அடிப்படை வசதிகளை செய்ய தொடங்கி உள்ளனர்.

தேனி கலெக்டர் முரளீதரன் இன்று அன்னஞ்சி ஊராட்சிக்கு (தேனி நகராட்சிக்குள் தான் உள்ளது) உட்பட்ட நரிக்குறவர் காலனிக்கு சென்றார். அங்கு அவரை நரிக்குறவர் இன மக்கள் சிறப்பாக வரவேற்றனர். நரிக்குறவ பெண் ஒருவர் வெள்ளைபாசி மாலையை கலெக்டருக்கு அணிவித்தார். சிரித்துக்கொண்டே மாலையை கழுத்தில் அணிந்து கொண்ட கலெக்டர், ''என் கிட்ட இது போல நிறைய இருக்கு'' என்றார். பின்னர் இந்த மக்கள் கலெக்டருக்கு பொன்னாடை போர்த்தினர்.

வழக்கம் போல் நரி்க்குறவர் காலனியில் அடிப்படை வசதிகளை செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட கலெக்டர் பின்னர் வேறு பகுதியில் தனது ஆய்வு பணியினை தொடர்ந்தார்.

Tags:    

Similar News