என்.எஸ். பொறியியல் கல்லுாரியில் மரக்கன்றுகள் நடும் விழா

தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லுாரியில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது

Update: 2022-06-03 10:15 GMT

தேனி என்.எஸ்., பொறியியல்  தொழில்நுட்பக்கல்லுாரியில் கலெக்டர் முரளீதரன் மரக்கன்றுகளை நட்டார்.

கலெக்டர் முரளீதரன், மாவட்ட வனஅலுவலர் வித்யா, மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணி, மாவட்ட உதவி வனப்பாதுகாவலர் மகேந்திரன், திட்ட இயக்குனர் தண்டபாணி, கல்லுாரி முதல்வர் மதளை சுந்தரம், துணை முதல்வர் மாதவன், வேலை வாய்ப்பு அலுவலர் கார்த்திகேயன், என்.எஸ்.எஸ்., ஒருங்கிணைப்பாளர் பிரதீப்குமார் உட்பட பலர் பங்கேற்றனர். கல்லுாரி வளாகத்தில் சிவகுண்டலம், வில்வம், இழுப்பை, நாகலிங்கம், மருதம், சரக்கொன்றை போன்ற பல வகையான 200க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.

Tags:    

Similar News